சோழன் விரைவு ரயிலில் சிக்கிய வெள்ளி பொருட்கள் - தீவிர விசாரணை நடத்தும் போலீசார்.! - Seithipunal
Seithipunal


இன்று சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் சோழன் விரைவு ரயிலில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல், ரூ.19 லட்சம் மதிப்புள்ள 19.5 கிலோ எடையிலான வெள்ளிப்பொருட்கள் எடுத்து செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த கமலேஷ், லோகேஷ் உள்ளிட்ட இருவரிடம் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாட்டில் தெலங்கானா உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருளாக வழங்க இந்த பொருட்கள் எடுத்து செல்லப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் வெள்ளிப்பொருட்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 kg silvar seized in cholan express


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->