19 மின்சார ரெயில்கள் ரத்து; தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
19 electric trains canceled Southern Railway announcement
பராமரிப்பு பணி காரணமாக சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே 19 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
‘பொன்னேரி–கவரப்பேட்டை இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகளின் காரணமாக, சென்னை சென்டிரல்–சூலூர்பேட்டை இடையேயான 19 மின்சார ரெயில்கள் இன்று மற்றும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, கடற்கரை மற்றும் ஆவடி நோக்கி செல்லும் பல மின்சார ரெயில்கள், மேலும் கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, நெல்லூர் ஆகிய இடங்களில் இருந்து சென்டிரல் நோக்கி வரும் சில ரெயில்கள் இயக்கப்படமாட்டாது.
பயணிகள் சிரமம் குறைய, சென்டிரல்–பொன்னேரி, பொன்னேரி–சென்டிரல், கடற்கரை–பொன்னேரி, சென்டிரல்–மீஞ்சூர் மற்றும் மீஞ்சூர்–சென்டிரல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்டிரலில் இருந்து இன்று மற்றும் 11-ந் தேதி காலை 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி ரயில் ரத்து. கு ம்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து.
காலை 10.15 மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்,சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, மாலை 3.15, இரவு 9 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து .
சூலூர்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், சென்டிரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயிலும் ரத்து .
இந்த 2 நாட்களிலும் சென்டிரல்-பொன்னேரிக்கு காலை 10.30 மணி, பொன்னேரி-சென்டிரலுக்கு மதியம் 1.18, மாலை 3.33 மணி, கடற்கரை-பொன்னேரிக்கு மதியம் 12.40 மணி, சென்டிரல்-மீஞ்சூருக்கு காலை 11.35 மணி, மீஞ்சூர்-சென்டிரலுக்கு மதியம் 2.59 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன
English Summary
19 electric trains canceled Southern Railway announcement