தமிழகத்தில் இன்று (அக்டோபர் - 17) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!
17.10.2022 power cut places in tamilnadu
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (அக்டோபர் 17) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் புதுவயல்துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. அதன் காரணமாக அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
சென்னை
போரூா் பகுதிகளான திருமுடிவாக்கம் முருகன் கோயில் பிராதன சாலை, நல்லீஸ்வரா் நகா், பல்லவாராயண் குளக்கரை தெரு, ஜகன்நாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கிண்டி பகுதிகளான முகலிவாக்கம் ஏ.ஜி.எஸ் காலனி, செல்வ லட்சுமி கார்டன், உதயா நகர், வி.ஜி.என் லட்சமி நகர் நந்தம்பாக்கம் திருவள்ளுவர் நகர், பெல் நகர், காவியா கார்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் காரணமாக இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது.
English Summary
17.10.2022 power cut places in tamilnadu