பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த சிறுவன் கைது..!
17 Year old boy arrested
சிறுமியை பாலியல் வன்கொடுமை 17 வயது சிறுவனை உடந்தையாக இருந்த இளைஞரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், ஆவினங்குடி பகுதியில்16 வயது சிறுமியை வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் வாட்ஸ்ஆப் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை திருப்பூருக்கு அழைத்து சென்றார்.
அங்கு சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மகளை காணாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையிக் சிறுமியை தேடி வந்த காவல்துறையினர் அவர் திருப்பூரில் இருப்பதை கண்டறிந்தனர்.
அங்கு சென்ற காவல்துறையினர் சிறுமியை மீட்ட காவல்துறையினர் சிறுவனையும் அவருக்கு உடந்தையாக இருந்த இளைஞரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.