சென்னையில் போக்குவரத்து மாற்றம்‌.. போக்குவரத்து காவல் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால், பலத்த மழை கொட்டி தீர்த்தது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய ஒட்டுமொத்த மழையும் கடந்த 11 நாட்களில் கொட்டி தீர்ந்துவிட்டது. 

இதன் காரணமாக, தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும், விளைநிலங்களில் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில், சென்னையில் ஏற்பட்டுள்ள மழைநீர் பெருக்கால் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில்‌ வாகன போக்குவரத்தின்‌ தற்போதைய நிலவரம்‌.

மழைநீர்‌ பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்‌:-

1) பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள்‌ தி.நகர்‌, பசூல்லா சாலையில்‌ தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும்‌ பணியை மேற்கொண்டு வருகிறார்கள்‌. இதன்‌ காரணமாக ஜி.என்செட்டி சாலை -வாணி மஹால்‌ சந்திப்பிலிருந்து பசூல்லா நோக்கி செல்லும்‌
வாகனங்கள்‌ ஜி.என்செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

17 nov chennai traffic change


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->