14 வயது சிறுமி கர்ப்பம்.! 16 வயது சிறுவன் போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 16 வயது சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தான். இந்நிலையில் இந்த சிறுவனுக்கும், அதே பள்ளியில் பயிலும் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதனால் இவர்கள் இருவருமே பள்ளிக்குச் செல்லாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளனர். இதையடுத்து சிறுவன், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் சிறுமி கர்ப்பமானதால் சிறுவன், சிறுமியை விழுப்புரம் மாவட்டம் பனம்பாக்கத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து அக்காவிடம் இதைப்பற்றி கூறவே, ஆத்திரமடைந்த அக்கா இருவரையும் திட்டியுள்ளார். இந்நிலையில் இதையறிந்த அப்பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 year old boy arrested for pregnanting 14 year old girl in Cuddalore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->