கஞ்சா அடிப்பதற்காக வழிப்பறியில் ஈடுப்பட்ட சிறுவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்..!
14 year old Boy arrested
கஞ்சா அடிப்பதற்காக சிறுவன் வழிப்பறியில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையாய் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தஞ்சை பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்து கொண்டிருந்துள்ளார். அப்போது , அவர் செல்போனில் பேசி கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த 14 வயது சிறுவன் ஒருவன் அவர் பேசி கொண்டிருந்த செல்போனை பறித்து கொண்டு ஓடினார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அங்கிருந்வர்கள் அந்த சிறுவனை துரத்தி பிடித்தனர். பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனை கைது செய்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா அடிப்பதற்காக வழிப்பறியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. சிறுவனிடம் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.