சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்: 12 கிலோ கஞ்சா பறிமுதல் - வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது பத்தாவது நடைமேடையில் வந்து நின்ற தான்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த வாலிபர் ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் அவர் மயிலாப்பூரை சேர்ந்த ஷியாம் பிரசாத்(23) என்பதும், அவர் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஷியாம் பிரசாத்தை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த பையில் இருந்த 12 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 kg Ganja seized in Chennai Central railway station


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->