தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி வருண்குமாருக்கு புதிய பதவி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மாவட்ட எஸ்.பி மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உள்ளிட்ட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை கோட்டம் ரயில்வே எஸ்.பி. ஆக தருமபுரி மாவட்ட எஸ்.பி. பி.ராஜன் மாற்றம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி. ஆக பிரவேஷ் குமார் நியமனம்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த வருண்குமார் சென்னையிலுள்ள காவல் நவீனமய கணினி பிரிவு கண்காணிப்பாளராக நியமனம்.  ராமநாதபுரம் எஸ்பியாக இருந்த வருண்குமார் அண்மையில் இந்து இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

சென்னையில் உரிமைப் பிரிவு துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு, சட்டம்-ஒழுங்கு உதவி ஐஜியாக நியமனம்.

தலைமையிட துணை ஆணையராக இருந்த விமலா, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 ips officers transfer by tamilnadu government


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->