பள்ளிப்படிக்கும் பெண்ணிற்கு பலான படம்காட்டி இளைஞர் செய்த காரியம்.!
12 girl rape and cheat by her boy friend
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்டவலம் அருகே ஆவூர் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலிப்பதாக கூறி பார்த்திபன் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில், அந்த மாணவி 2 மாதம் கர்பமாகி உள்ளார். இது அந்த பெண்ணின் பெற்றோர்க்கு தெரியவந்ததை தொடர்ந்து பார்த்திபன் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி இருக்கின்றனர்.
இருப்பினும், பார்த்திபனின் பெற்றோர் கருவை கலைத்துவிட்டு வந்தால் தான் திருமணம் செய்து வைக்க முடியும் என்று கூறி தகராறு செய்துள்ளனர். இதனால், பெண்ணின் பெற்றோருக்கு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர், இந்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு பார்த்திபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
12 girl rape and cheat by her boy friend