11ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு.! சோகத்தில் பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் பதினோராம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் காரேந்தல் காலனி பகுதியை சேர்ந்தவர் மலையாண்டி. இவரது மனைவி பாண்டி மலர். இவர்களுடைய மகன் சர்வேஷவர் (17) பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சர்வேஸ்வரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சர்வேஸ்வர், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை எடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மாணவனின் தாய் பாண்டி மலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

11th class student suicide in ramanathapuram


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->