11 மற்றும் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வில் மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 5-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி, மே 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு 38 மாவட்டங்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுக்கு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வு நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்..

மேலும் பொதுத் தேர்வில் மாணவர்கள் பிட் அடித்தால் 2 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. அதேபோல் வினாத்தாள் லீக் செய்தால் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

11th and 12th practical exam time reduced


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->