இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 11 மீனவர்கள்.! விமானம் மூலம் சென்னை வந்தனர்.! - Seithipunal
Seithipunal


இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தனர்.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்nதமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த மார்ச் 22-ஆம் மீன் பிடித்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 11 பேரை கைது செய்து இலங்கையில் உள்ள சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து, மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் சிறையில் இருந்த 11 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்கள் 11 பேரும் ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்பு மீனவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 fishermen freed from Sri Lankan prison arrived in Chennai by plane


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->