படிக்கும் வயதில் துளிர்த்த காதல்.. நண்பனின் இச்சைக்கு காதலியை இரையாக்கிய காதலன்..!
10th std girl abused by lover
இன்றைய காலகட்டத்தில் கயவர்களிடம் இருந்து தங்கத்தை காட்டிலும் பெண்பிள்ளைகளை தான் அதிகம் கவனத்துடன் காத்துக்கொள்ள வேண்டும். இன்று வீட்டில் நுழையும் கயவர்கள் ஆடை, அணிகலன்களை மட்டுமில்லாமல் பெண்களின் கற்பையும் சூறையாடி சென்று விடுகிறார்கள். இந்த நிலைமையில் தான் ஒவ்வொரு பெற்றோர்களும் அவர்களது பெண்பிள்ளைகளை வளர்த்து வருகிறார்கள்.
அந்த வகையில், மயிலாடுதுறை அருகே கூறைநாடு என்னும் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ், இவருக்கு வயது 25. இவர் அதே பகுதியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலிப்பதாகக் கூறி அவருடன் பழகி வந்திருக்கிறார். இவர் கடந்த 2 வருடங்களாக அந்த சிறுமியுடன் பழகி வந்திருக்கிறார். இந்த நிலையில், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், சந்தோஷ் சிறுமியின் வீட்டுக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்ததுமில்லாமல் அதனை வீடியோவாக பதிவும் செய்துகொண்டார்.
மேலும், இந்த சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும் மீறி சொன்னால் வீடியோவை இணையத்தில் போட்டுவிடுவேன் என்று அந்த சிறுமியை மிரட்டியிருக்கிறான். இதை தொடர்ந்து, சந்தோஷ் அவனது நண்பரான கண்ணன்(36) என்ற நபருக்கு அந்த வீடியோவை பகிர்த்திருக்கிறான், பின்னர் கண்ணனும் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான். அந்த சமயத்தில் சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிடவே கண்ணன் அங்கிருந்து ஓடியிருக்கிறான்.
இதை கண்ட அதிர்ச்சியில், சிறுமியிடம் இது குறித்து விசாரித்துள்ளனர். பின்னர்அந்த சிறுமி, நடந்தவைகளை பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர், சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கண்ணன் மற்றும் சந்தோஷ் மீது புகார் அளித்தார்கள். அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார் அந்த இரண்டு கொடூரன்கள் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள்.
English Summary
10th std girl abused by lover