10-ம் வகுப்பு பள்ளி மாணவனை கத்தியால் குத்திய.. சக பள்ளி மாணவன்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்துள்ள தருமன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (14 வயது). இவர் பன்னியள்ளி புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 14-ம் தேதியன்று பிரவீன்குமார் பள்ளி வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது உடன் படிக்கும் சஞ்சய் மற்றும் அவரது நண்பர் சுனில் குமார் ஆகியோர் மாங்காய் கொடியை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்து ஆசிரியர்கள் அவர்களை சமாதானம் செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து சஞ்சய் நண்பர் சுனில் குமார், பிரவீன்குமார் செல்போனுக்கு கொலை மிரட்டல் ஆடியோவை அனுப்பியுள்ளார். இதனால் பயந்து போன பிரவீன் குமார் இன்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுனில் குமார் தனது புத்தகப் பையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவீன்குமார் முதுகில் குத்தினார். இதனை பார்த்த சக மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் படுகாயமடைந்த மாணவர் பிரவீன் குமாரை மீட்டு சிகிச்சைக்காக காவேரிபட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து காவேரிப்பட்டினம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th class school student stabbed same school student


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->