கொரோனாவுக்காக 108 ஆம்புலன்ஸ்சில் அழைத்து செல்லப்பட்ட மூதாட்டி! சிலிண்டர் கசிந்து 108 முழுவதும் எரிந்தது!
108 ambulance fire accident sengalpattu
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மூதாட்டியை கொரோனா சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் கசிந்து தீ பிடித்து இந்த தீயானது சிறிது நேரத்தில் மளமளவென ஆம்புலன்ஸ் முழுவதும் பரவி வாகனம் முழுவதும் முற்றிலும் தீ பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் ஓட்டுனர் சிவகுமார் உதவியாளர் அம்பிகாஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.
English Summary
108 ambulance fire accident sengalpattu