#BREAKING : தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் பொதுத்தேர்வு ரிசல்ட் எப்போது? - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது.

இந்த நடைபாண்டுகாண பொது தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இதில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 8 லட்சம் மாணவ மாணவிகளும், 10ம் வகுப்பு பொது தேர்வை 9 லட்சம் மாணவ மாணவிகளும் எழுத உள்ளனர்.

அந்த வகையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மார்ச் 13ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மே 5ம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மே 17ஆம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மே 19ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

மேலும், செய்முறை தேர்வுகள் சற்று முன்னதாக மார்ச் ஒன்றாம் தேதி முதல் 9ஆம் தேதிக்குள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10,11,12 students public exam results date announced


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->