மொத்தமே 365 பேர்.. அதுல 100 முனுசாமி.! முழி பிதுங்கும் தேர்தல் அதிகாரிகள்.!!
100 people name same in one village
17 வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு 97 மக்களவை தொகுதிகளுக்கு நடக்க உள்ளது. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் தயார் நிலையில் உள்ளது. இந்த வாக்கு சாவடிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் என 3 லட்சத்திற்கு மேற்பட்டவர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது.
இந்தியாவில் தேர்தல் நடக்கிறது என்றாலே பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கும். அது போல ஒரு நிகழ்வு, ராமநாதபுரம் மாவட்டத்தின் பாப்பணம் கிராமத்தில் அரங்கேறிவருகிறது. அந்த கிராமத்தில் மொத்தம் உள்ள 365 வாக்காளர்களில் 100 பேர் முனுசாமி என்ற பெயரை கொண்டு இருப்பதால், ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் அதிகாரிகள் குழப்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
English Summary
100 people name same in one village