கோவா ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் பாஜக அபார வெற்றி; ''சிறந்த நிர்வாகத்துக்கு வளர்ச்சி அரசியலுக்கு கோவா துணை நிற்கிறது'; பிரதமர் மகிழ்ச்சி..! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் பாஜ தலைமையிலான மஹாயுதி கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியோடு கோவாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பாஜ வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் ''சிறந்த நிர்வாகத்துக்கு கோவா துணை நிற்கிறது. வளர்ச்சி அரசியலுக்கு துணை நிற்கிறது.'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சமீபத்தில் கோவா ஜில்லா பரிஷத்துகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. அதன்படி, வடக்கு கோவாவில் பாஜ 13, காங்கிரஸ் 08 இடங்களையும், தெற்கு கோவாவில் பாஜ 10 மற்றும் காங்கிரஸ் 01 இடத்தையும் வெற்றி பெற்றன. மற்ற இடங்களில் பிராந்திய கட்சிகளும், சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளன.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

''சிறந்த நிர்வாகத்துக்கு கோவா துணை நிற்கிறது. வளர்ச்சி அரசியலுக்கு துணை நிற்கிறது. பாஜ கூட்டணிக்கு ஆதரவு அளித்த கோவா சகோதர் சகோதரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கோவாவின் வளர்ச்சிக்கான நமது முயற்சகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும். இ்நத அற்புதமானமாநில மக்களின் கனவுகளையும் லட்சியங்களையும் மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நமது கடினமாக உழைக்கும் தேஜ கூட்டணி தொண்டர்கள் களத்தில் பாராட்டுக்குரிய பணிகளை செய்துள்ளனர். அதுவே இந்த வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Prime Minister thanked the BJP for its victory in the Goa local body elections


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->