சிறுமியிடம் பாலியல் சீண்டல் - தொழிலாளிக்கு அதிரடி தண்டனை விதித்த திண்டுக்கல் நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் குளத்தூர் அருகே ஆர்.வி.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கனகபாண்டி (29). இவர் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் உறவினர்கள் உடனடியாக இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கனகபாண்டியன் கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். இதில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளியான கனகபாண்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 years prison for worker who sexually harassing a girl in Dindigul


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->