தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.!! இலங்கை கடற்படையினர் அட்டுழியம்!! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன் பிடிக்க சென்றனர். இந்த நிலையில் இலங்கை ஒட்டிய திரிகோணமலை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேரை அப்பகுதிக்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் படகுடன் கைது செய்துள்ளனர். இவர்களை தற்பொழுது திரிகோணமலை கடற்படை முகாமிற்கு கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் தீரிகோணமலை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று கடந்த வாரம் மண்டப பகுதி மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை படையினர் சிறையில் அடைத்தனர். இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் 19 தமிழக மீனவர்களை கைது செய்த தோடு அவர்கள் பயணம் செய்த படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது இரு தரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காணப்படும் என உறுதி அளித்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->