ஈரோடு: தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து.! 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் எதிர்பாராதவிதமாக சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர். மேலும் ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார். இதையடுத்து காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கிய பள்ளி வாகனத்தை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 childrens injured in private school bus accident in erode


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->