தண்ணீர் வாளியில் விழுந்து 1 வயது குழந்தை உயிரிழப்பு – வானகரத்தில் சோகம்!
1-year-old child dies after falling into a water well grief in Vaanagaram
தண்ணீர் நிரப்பிய வாளியில் தவறி விழுந்த, 1 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சோகம் வானகரம் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
சென்னை வானகரம்,பாப்பம்மாள் ரெட்டி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அசோத்தமன் (36) மற்றும் அவரது மனைவி சவுமியா (30) தம்பதிக்கு, 3 வயது மற்றும் 1 வயது என்ற இரு மகள்கள் உள்ளனர்.
நேற்று மாலை, மூத்த மகளுக்கு மருந்து கொடுத்துக்கொண்டும், இளைய மகள் தீக்சா (1 வயது) வீட்டில் விளையாடிக்கொண்டும் இருந்த நிலையில், சில நேரத்திற்குப் பின் தீக்சா காணாமல் போனதால், சவுமியா தேட ஆரம்பித்தார்.
அப்போது குளியல் அறையில் உள்ள தண்ணீர் வாளியில் தீக்சா தலைகீழாக விழுந்து மூச்சுத்திணறி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வைத்தியர்கள் தீக்சா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் மறைவு பெற்றோரையே மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் பெரிதும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக வானகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம், சிறு குழந்தைகள் அருகே எப்போதும் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவுபடுத்துகிறது. குறிப்பாக, தண்ணீர் வாளி, தொட்டி, குளியல் அறை போன்ற இடங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை பெற்றோர்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.அப்போதுதான் இதுபோன்ற துயர சம்பவங்களை தடுக்கலாம்.
English Summary
1-year-old child dies after falling into a water well grief in Vaanagaram