தமிழகத்தில் இன்று (06.12.2022) எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.. முழு விபரம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (டிசம்பர் 6ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

வையம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

மதுரை

மாட்டுத்தாவணி துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

திருப்பூர் 

மூலனூர், கொளத்துப்பாளையம், கன்னிவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9மணி முதல் பகல் 2மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

நாமக்கல் 

புதன்சந்தை துணைமின் நிலையம் மற்றும் திருச்செங்கோடு துணைமின் நிலையங்களில் ஆகியவற்றில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

06.12.2022 power cut places in tamilnadu


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->