#WIPL : மகளிர் ஐபிஎல் ஏலம்.. அதிரடி  விக்கெட் கீப்பரை பெங்களூர் அணி.! - Seithipunal
Seithipunal


முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 3ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மகளிர் ஐபிஎல் சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், அகமதாபாத், லக்னோ அணி ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

அதன்படி, 5 அணிகளும் 4669.99 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இதனையடுத்து மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளுக்கான ஏலம் தற்போது மும்பையில்  நடைபெற்று வருகிறது.

இதில், ஒவ்வொரு அணிக்கும் ஏலம் எடுக்க அதிகபட்ச தொகையாக ரூ.12 கோடி நிர்ணயித்துள்ளது. மேலும், ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 வீராங்கனைகளையும், அதிகபட்சமாக 20 வீராங்கனைகளையும் ஏலம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முக்கிய வீரர்களை பெங்களூர் அணி வாங்கியுள்ளது. ஆண்களுக்கான ஐபிஎல் போட்டியில் இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத பெங்களூர் அணியின் கனவை மகளிர் அணி நிறைவேற்றுற.உம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூர் அணி வீராங்கனைகள்

ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 3.4 கோடி - பேட்ஸ்மேன்

எல்லீஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) - 1.7 கோடி - ஆல்ரவுண்டர்

ஷோபியா டிவைன் (நியூசிலாந்து) - 50 லட்சம் - ஆல்ரவுண்டர்

ரேணுகா சிங் (இந்தியா) - 1.5 கோடி - ஆல்ரவுண்டர்

ரிச்சா கோஷ் (இந்தியா) - 1.9 கோடி - விக்கெட் கீப்பர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WPL Auction banglore buy Richa Ghosh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->