ஜூனியர் உலகக்கோப்பை || 326 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஜூனியர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை : உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் 326 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. பி பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புதுமுக அணியான உகாண்டாவுடன் இந்திய அணி மோதியது. 

டாஸ் வென்ற உகாண்டா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரகுவன்சி 144 ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடிய ராஜ் பாவா  162 ரன்களை குவித்தார். அதில், 14 பவுண்டரி, 8 சிக்சரும் அடங்கும்.

50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்களை இந்திய அணி குவித்தது. இதையடுத்து 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  உகாண்டா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து  விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

19.4 ஓவர்களில் 79 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் உகாண்டா அணி இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Under19 Cricket World Cup India wins


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->