இந்தியா - தென் ஆப்பிரிக்க டி20 தொடர்.. நாளை இந்தியா வரும் தென் ஆப்பிரிக்க வீரர்கள்.!! - Seithipunal
Seithipunal


தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி வருகிற 9-ஆம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. 

இரண்டாவது ஆட்டம் கட்டாக்கில் 12ஆம் தேதி நடைபெறுகிறது. மூன்றாவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் 14ஆம் தேதி நடைபெறுகிறது. நான்காவது ஆட்டம் 17-ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ஐந்தாவது ஆட்டம் பெங்களூரில் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த அனைத்து ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 

இதையொட்டி, தென் ஆப்பிரிக்க வீரர்கள் நாளை டெல்லி வந்த அடைகிறார்கள். அதேபோல இந்திய வீரர்கள் அனைவரும் 5ஆம் தேதி டெல்லியில் ஒருங்கிணைப்பாளர்கள் என டெல்லி கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த இரண்டு மாதங்களாக இந்திய வீரர்கள் தொடர்ந்து விளையாடி வந்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி  உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக கே எல் ராகுல் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomorrow south africa cricketers arrive in india


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->