ஒரே ஓவரில் மூன்று விக்கெட்; சாதனை படைத்த சாகிப் மக்மூத்..! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 04-வது போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஜேமி சுமித் மற்றும் மார்க் வுட்டுக்கு திலாக ஜேக்கப் பெத்தேல் மற்றும் சாகீப் மக்மூத் ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்நிலையில், பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்தது. இதன் பின் 2-வது ஓவரை சாகீப் மக்மூத் வீசினார். 

இவருடைய பந்துவீச்சில் இந்திய அணி நிலை குலைந்தது. ஓவரின் முதல் பந்தில் சாம்சனை வீழ்த்திய அவர் 2-வது திலக் வர்மாவையும், கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூன்று பேரையும் அவுட்டாக்கினார். அத்துடன் அந்த ஓவரில் ரன் எதுவும் விட்டுக்கொடுக்காமல் மெய்டன் வீசியமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் ரன் எதுவும் விட்டுக்கொடுக்காத முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை சாகீப் மக்மூத் படைத்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three wickets in an over Saqib Mahmood creates a record


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->