Out or Not Out.!! சர்ச்சையான 3வது நடுவரின் முடிவு.. பொங்கி எழுந்த நெட்டிசன்கள்..!! - Seithipunal
Seithipunal


லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு 444 என்ற இமாலய இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. இதனை அடுத்து 4வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

19 பந்துகளை எதிர்கொண்ட சுப்மன் கில் 2 பவுண்டரிகள் உட்பட 18 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்காட் போலண்ட் வீசிய 7வது ஓவரின் முதல் பந்தில் மேட்டில் எட்ஜ் ஸ்லிப்பில் கேமரூன் கிரீனிடம் சென்றது.  அப்போது அவர் தனது இடதுபுறத்தில் கேட்சை எடுக்க குனிந்தார். ஆனால் கிரீன் கேட்சை எடுக்கும் போது பந்து தரையில் பட்டதா..? இல்லையா.. ? என்பதில் சில சந்தேகம் இருந்தது.

இதனை அடுத்து மூன்றாவது நடுவர் முடிவுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நடுவராக செயல்பட்ட ரிச்சர்ட் கெட்டில்பரோவ் ஆஸ்திரேலிய ஃபீல்டர் கிரீன் பந்தின் கீழ் விரல்களைப் பிடித்தார். நீண்ட ஆலோசனை மற்றும் பல கோணங்கள் மற்றும் ரீப்ளேகளின் ஆய்வுக்குப் பிறகு கேட்ச் கொடுப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த கில் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மூன்றாவது நடுவரின் முடிவு குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. கேமரூன் கிரீன் கேட்ச் பிடித்த பொழுது பந்து தரையில் பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதை சரியாக கவனிக்க தவறிய மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் கேமரூன் கிரீன் பின்னால் இருந்த புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கேமரூன் கிரீனின் இடது கையில் இரண்டு விரல்களுக்கும் இடையே பந்து தரையில் பட்டது தெளிவாக பதிவாகியுள்ளது. இதனை கொண்டு இணையதள வாசிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். 

மூன்றாவது நடுவரின் முடிவு குறித்து வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் "மூன்றாவது நடுவர் சுப்மன் கில் குறித்து அந்த முடிவை எடுக்கும்போது. உறுதியற்ற ஆதாரம். சந்தேகம் வந்தால், அது நாட் அவுட்" என கண்ணைக் கட்டிய நபரின் புகைப்படத்துடன் விமர்சனம் செய்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

third umpire decision to get Shubman gil out is controversial


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->