வெற்றி கொண்டாட்டத்தில் அஜித்தின் மாஸ் டயலாக்கை ட்வீட் செய்த சென்னை அணி வீரர்!! ரசிகர்கள் உற்சாகம்!!  - Seithipunal
Seithipunal


இம்ரான் தாஹிர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி குறித்து அஜித்தின் மாஸ் டயலாக்கை அடிப்படையாக கொண்டு ட்வீட் செய்துள்ளார். இது தற்பொழுது வைரலாகப் பரவி வருகிறது.

நேற்று ஐ.பி.எல் குவாலிஃபையர் 2 போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 148 ரன்களை டார்கெட்டாக வைத்தது. தாஹிர் 1 விக்கெட்டையும் சாஹர், ஹர்பஜன் சிங், பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சென்னை அணி சார்பில் வீழ்த்தினர்.

அடுத்து டெல்லி அணி சார்பாக களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் டூ பிளெசிஸ் மற்றும் வாட்சன் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இம்ரான் தாஹிருக்கு ‘கேம் சேஞ்சர்’ விருது வழங்கப்பட்டது. அதன்பின்னர், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு மாஸான டயலாக்கை பதிவு செய்திருந்தார். 

 

அதில், “எங்களோட சி.எஸ்.கே வாழ்க்கைல ஒவ்வொரு ஐ.பி.எல்-லும், ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும், ஏன் ஒவ்வொரு பாலும் நாங்களா செதுக்கினது டா. எடுடா வண்டியா போடுடா விசில” என எழுதியுள்ளார். இதனால் அஜித் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகத்தில் இருப்பதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tahir tweet ajith dialogue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->