#T20Worldcup : ஷதாப், இப்திகார் அதிரடி ஆட்டம்.. 186 ரன்கள் தென்னாபிரிக்காவுக்கு இலக்கு.. வெற்றி யாருக்கு.? - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற அனைத்து அணிகளுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

அந்த வகையில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இன்று மதியம் 1.30 மணிக்கு சிட்னி மைதானத்தில் தென்னாபிரிக்கா அணியுடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பேட்டிங்  தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய சதாப்கான் 22 பந்துகளில் 52 ரன்களும், இப்திகார் அகமது 35 பந்துகளை 51 ரன்களும் எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்க உள்ளது. 

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இன்றைய தினம் தோல்வியடைந்தால் உலக கோப்பையில் இருந்து வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற மிகவும் தீவிரமாக பந்து வீசும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup Pakistan target of 186 against South Africa


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->