நான் மட்டும் கோலி அணியில் விளையாடியிருந்தால், இந்தியா 3 உலககோப்பைகளை வென்றிருக்கும்! மௌனம் களைத்த இந்திய வீரர்!
Sreesanth thinks, if he play under virat india should get more world cups
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு தற்போது போதாத காலம். தொடர்ந்து சொதப்பி வருவதால் பல தரப்பில் இருந்து ஆலோசனைகளும், அறிவுரைகளும், விமர்சனங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த நிலையில் தான், "கோலி அணியில் நான் விளையாடி இருந்தால், இந்திய கிரிக்கெட் அணி 3 உலகக் கோப்பைகளை வென்றிருக்குக்கும்" என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேரளாவை சார்ந்த சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியவர் ஸ்ரீசாந்த். அவர் தோனியின் கீழ் விளையாடிய 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
2007 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில், பரபரப்பான நேரத்தில், பாகிஸ்தான் அணியின் கடைசி விக்கெட்டான மிஸ்பா உல் ஹக் விக்கெட்டை கேட்ச் பிடித்து, அணியை வெற்றி பெற வைத்தவரும் ஸ்ரீசாந்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2013 ஆம் ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கி, ஏழு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடையை பெற்றார். தடை காலம் முடிந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார். மீண்டும் ஐபிஎல் திரும்ப முயற்சித்தவரின் முயற்சி கைகூடவில்லை. பின்னர் இந்த வருடம் மார்ச் மாதம் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், "கோலியின் அணியில் நான் விளையாடி இருந்தால், இந்திய கிரிக்கெட் அணி 2016, 2019, 2021 ஆகிய 3 உலகக் கோப்பைகளை வென்றிருக்குக்கும்" என தெரிவித்துள்ளார்.
2011 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி அணியில், ஆஷிஷ் நெஹ்ரா காயம் காரணமாக விலக ஸ்ரீசாந்த் இணைக்கப்பட்டார். அதிஷ்டத்தை மனதில் வைத்தே அவர் சேர்க்கப்பட்டார் என அப்போது பேசப்பட்டது. அந்த அதிஷ்டத்தை மனதில் வைத்து தான் ஸ்ரீசாந்த் இப்போது இவ்வாறு பேசினாரோ என்னவோ?!
English Summary
Sreesanth thinks, if he play under virat india should get more world cups