உலக அளவில் புதிய செயலி.. கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!
sourav ganguly new announcement
கல்விக்காக உலக அளவிலான புதிய செயலியை தொடங்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உதவும் வகையில் புதிதாக ஒன்றை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் கங்குலி தெரிவித்துள்ளார். இதனிடையே அரசியல் நுழைவதற்காக பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து கங்குலி விலகக் கூடும் என தகவல்கள் வெளியாகி நிலையில், இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மறுத்து உள்ளார்.
இந்நிலையில், புதிதாக ஒன்றை தொடங்க இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கங்குலி வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், கிரிக்கெட் உலகில் நான் வந்து இதோடு 30 வருடங்கள் ஆகிறது. 30 வருடங்களில் எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி. மக்களுக்கு உதவுவதற்காக நான் இன்று ஒரு விஷயத்தை தூங்க போகிறேன். நான் துவங்கும் விஷயம் பலருக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
sourav ganguly new announcement