விரைவாக 3000 ரன்கள் கடந்து புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா! - Seithipunal
Seithipunal


ஸ்மிர்தி மந்தனா விரைவாக 3000 ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்!

இந்திய மகளீர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஸ்ருதி மந்தனா இங்கிலாந்துக்கு எதிராக கேன்டர்பரில் நடந்த சர்வதேச ஒரு நாள் போட்டியில் 40 ரனகளை எடுத்தார்.

இதன் மூலம் விரைவாக 3000 ரன் என்ற இலக்கை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அடைகிறார்.

ஸ்மிர்தி மந்தானா இதுவரை 76 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் இந்த இலக்கை 88 போட்டிகளில் எட்டி இருந்த நிலையில் மந்தானா அச்சாதணையை முறியடித்துள்ளார்.

ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டில் விரைவாக 3000 கண்கள் எடுத்தவர் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 3ம் இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான் 72 போட்டியிலும் இரண்டாம் இடத்தில் விராட் கோலி 75 போட்டியிலும் முறையே இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் ஸ்மிர்தி மந்தானா இடம்பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Smriti Mandhana becomes the fastest Indian player to score 3000 runs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->