அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா.. பொதுமக்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த சவுதி மன்னர்.! - Seithipunal
Seithipunal


2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். 

இதில் நேற்று நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் உலகின் தலைசிறந்த அணியான அர்ஜென்டினாவை எதிர்த்து சவூதி அரேபியா விளையாடியது.

இந்த போட்டியில் கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக  2-1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியா வெற்றிபெற்றது. உலக கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவை 51-வது இடத்திலிருக்கும் சவூதி அரேபியா வீழ்த்தியது கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் அர்ஜென்டினாவிற்கு எதிரான சவூதி அரேபியாவின் வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கும் விடுமுறையை அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saudi Arabia beat Argentina in football world cup


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->