மறைந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்க்கு பூரி கடற்கரையில் மணற் சிற்பம் மூலம் அஞ்சலி.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் பலியானார். இவருக்கு வயது 46.

இவர் ஆஸ்திரேலியா அணிக்காக 198 ஒருநாள் போட்டிகளிலும், 26 டெஸ்ட் போட்டிகளிலும், 14 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 

மேலும் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் இவர் விளையாடி உள்ளார்.

இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் உயிரிழந்த நிலையில், ஆண்ட்ரூ டைமண்ட்சும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் என்பவர், உயிரிழந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது உருவத்தை பூரி கடற்கரை மணலில் சிற்பமாக உருவாக்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sand art for praying tribute to Andrew symonds


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->