விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா.!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனிடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்தது. அதில் கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களை எடுத்தார். இது ரோகித் சர்மாவின் 30வது அரை சதம் ஆகும். 

இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த விராட் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் ரோகித் சர்மா 30 அரை சதத்துடன் முதலிடத்தில் உள்ளார். விராட்கோலி 29 அரை சதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 25 அரை சதத்துடன் 3 வது இடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்சர்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rohit sharma new record in t 20 match


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->