சூரியகுமார் யாதவுக்கு மீண்டும் வாய்ப்பா? ராகுல் ட்ராவிட் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 நாள் ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

குறிப்பாக சூரியகுமார் யாதவ் இந்த இரு ஆட்டங்களிலும் ரன் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்து இருந்தார்.

இந்நிலையில், சூர்யா குமார் ஆட்டம் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், "சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் நிறைய விளையாடியுள்ளார், ஆனால் அவர் போதுமான அளவு விளையாடாததால் 50 ஓவர் ஆட்டத்தை அவர் கொஞ்சம் கற்றுக் கொண்டுள்ளார். 

அவருக்கு சிறிது நேரம் கொடுத்து பொறுமையாக இருக்க வேண்டும்" என்று ராகுல் ட்ராவிட் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் மீண்டும் சூர்யா குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Dravid Say About Surya kumar yadav


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->