புரோ கபடி லீக், ஹரியானா அசத்தல் வெற்றி.! - Seithipunal
Seithipunal


புரோ கபடி லீக் ஆட்டத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி ஹரியானா அணி வெற்றி பெற்றுள்ளது.

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்காள் அணியும், ஹரியானா அணியும் மோதின, ஆட்டத்தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய பெங்கால் அணி 11-9 என முன்னிலையில் இருந்தது. திடீரென எழுச்சி கண்ட ஹரியானா வீரர்கள் பெங்கால் அணியின் அனைத்து வீரர்களையும் வீழ்த்தி, 17-15 என முன்னிலை பெற்றனர். ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 19-19 என சம நிலையில் இருந்தனர். 

பின்னர் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஹரியான அணியினர் ஆதிக்கம் செலுத்தி பெங்கால் வீரர்களை வீழ்த்தினர். ஆட்ட நேர முடிவில் 46-29 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஹரியானா அணி 16 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வி, 3 டை என 48 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. பெங்கால் அணி 16 போட்டிகளில் 7 வெற்றி 8 தோல்வி 1 டை என 41 புள்ளிகளுடன் 10 வது இடத்தில் நீடிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pro Kabadi Hariyana beats Bengal


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->