ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் பிரேசில் அணியில் மீண்டும் நெய்மார்; ரசிகர்கள் உற்சாகம்..! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் பிரேசில் அணி உருகுவே அணியை எதிர்கொண்ட ஒரு ஆட்டத்தில், முதல் பாதி ஆட்டத்தின் போது பிரேசில் அணியின் பிரபல நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மார் பலத்த காயமடைந்தார். அதன் காரண்மாக அவர் அந்த தகுதி சுற்று போட்டியில் இருந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறினார்.

நெய்மருக்கு  காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரை ஸ்டிரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த போட்டியில் அவர் இல்லாத நிலையில் பிரேசில் அணி 2-0 என தோல்வியடைந்தது. 

அந்நிலையில், நெய்மார் காயமடைந்து வெளியேறியது பிரேசில் அணிக்கு மிகவும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இது குறித்து அப்போது அணியின் கேப்டன் கேகேமிரோ கூறியதாவது:- "அவர் எங்களுக்கு முக்கியமான வீரர், அவர் தொடர்ந்து ஆடவேண்டும் என மிகவும் விரும்புகிறோம். ஆனால், அவர் காயங்களால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். காயத்தில் இருந்து குணமடைந்து பார்முக்கு திரும்பும்போது மீண்டும் காயமடைகிறார்" என்று கேசேமிரோ கூறியிருந்தார்.

இந்நிலையில், வருகிற 20-ந்தேதி உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, கொலம்பியாவையும், 25-ந்தேதி நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவையும் சந்திக்க உள்ளது.

இந்த தகுதி சுற்றுக்கான பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் 33 வயதான நெய்மார் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இவரின் இடதுகால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் நிறைய போட்டிகளை தவற விட்டிருந்தார். தற்போது நெய்மார் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பிரேசில் அணிக்கு திரும்பியுள்ளார். இந்த தகவல் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Neymar back in Brazil team after one and a half years


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->