முக்கிய வீரர்களை தட்டி தூக்கிய லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 14 வது சீசன் முடிந்த உடன் புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு, 15 வது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்த புதிய 2 அணிகளை ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அதில் லக்னோ, அகமதாபாத் அணிகள் தேர்வு செய்யப்பட்டது. 

இந்த புதிய இரண்டு அணிகளுக்கு தரமான வீரர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, மெகா ஏலத்திற்கு முன்பு பழைய 8 அணிகளும் விதிமுறைக்கு உட்பட்டு 4 பேரை தக்க வைக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் வீரர்களை தக்க வைத்தனர். 

இதையடுத்து, லக்னோ, அகமதாபாத் அணிகள் இரண்டு உள்நாட்டு வீரர்களையும், ஒரு வெளிநாட்டு வீரரையும் தக்க வைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதற்கான வேலைகளில் இரு அணிகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, இரண்டு அணிகளும் யாரை தக்க வைப்பார்கள் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. 

இந்நிலையில், லக்னோ, அகமதாபாத் அணிகள் தக்கவைத்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் அணியில் ஹார்திக் பாண்ட்யா (கேப்டன்), ரஷித் கான், சுப்மான் கில் ஆகியோரை தக்கவைத்துள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷித் கான் இருவரும் தலா 15 கோடிக்கும், சுப்மான் கில் 8 கோடிக்கும் எடுக்கப்பட்டுள்ளது.

லக்னோ அணியை பொறுத்தவரை கேஎல் ராகுல் கேப்டனாகவும், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோரை தக்கவைத்துள்ளது. கேஎல் ராகுல் 17 கோடிக்கும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 9.2 கோடிக்கும், ரவி பிஷ்னோய் 4 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

lucknow and ahmedabad team


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->