லக்னோவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய பஞ்சாப்.. 20 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15 வது சீசனில் 42வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இது எடுத்து லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல்  6 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் தீபக் ஹூடாவும் சிறப்பாக ஆடினார். 

டி காக் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 46 ரன்களில் அவுட் ஆனார். தீபக் ஹூடா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யா, ஸ்டோய்னிஸ், ஆயுஷ் படோனி மற்றும் ஜேசன் ஹோல்டர் யாரும் சரியாக ஆடவில்லை. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 153 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்களை வீழ்த்தினா.ர் ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் ஆரம்பமே அதிரடியாக ஆடி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொல்லுதலும் அளவிற்கு ரன்களை எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LSG vs PBKS Match LSG Win


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->