நட்சத்திர கிரிக்கெட் வீரர் தனது ஓய்வுவை அதிகார்வப்பூர்வமாக அறிவித்தார்., சோகத்தில் ரசிகர்கள்!!
lasith malinga announced his retirement
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர பந்து வீச்சாளரான லஸித் மலிங்கா (வயது 35) மலிங்கா சிறப்பான பந்து வீச்சால் எதிரணியை திணறடிக்க கூடியவர், இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் இவர் சுமார் 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
சர்வதேச டி 20 போட்டிகள் அதிக இலக்குகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மலிங்க, இங்கிலாந்தில் நடைபெற்று முடித்த உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில், ஓய்வு குறித்து லசித் மலிங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, வெள்ளிக்கிழமை வங்கதேசம் அணிக்கு எதிராக நடக்கவுள்ள ஒருநாள் போட்டியே நான் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டி முடிந்தால் எனது கடைசி ஒரு நாள் போட்டியை, நேரில் வந்து பாருங்கள், மேலும் கடந்த 16 வருடங்களாக எனக்கு ஆதரவளித்து அவரும் ரசிகர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் எனக்கு இடம் கிடைக்கும் என நம்புகிறேன். ஓரு வேலை, என்னை விட சிறந்த வீரர்கள் இருக்கலாம், அணியில் இருந்து வெளியேறுவது குறித்து நான் பொருட்படுத்தவில்லை என தெரிவித்தார்.
வாங்க தேசதுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் இலங்கையில் இருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ளார். அதற்காக அங்கு சொந்தமாக வீடு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
lasith malinga announced his retirement