ஐபிஎல் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.. ஐபிஎல் சீசன்-15 தொடங்கும் தேதி அறிவிப்பு.!!
IPL season 15 starts on march 26
15வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த 15வது ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் புதிதாக இடம்பெற்றுள்ளன.
10 அணிகள் இந்த ஐபிஎல் சீசனில் பங்கேற்பதால், மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக, இந்த ஐபிஎல் தொடரை ஒரே இடத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஐந்து மைதானங்களில் இந்த ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும், மும்பையில் உள்ள வான்கடே மைதானம், டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம், பிரபோர்ன் மைதானம், நவி மும்பையில் உள்ள ரிலையன்ஸ் ஸ்டேடியம், புனேயில் உள்ள மைதானம் உள்ளிட்ட ஐந்து மைதானங்களில் போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் 2022 15-வது சீசனின் முதல் போட்டி மார்ச் 26ஆம் தேதி தொடங்குகிறது என ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் படெல் அறிவித்துள்ளார். இந்த போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
IPL season 15 starts on march 26