ஐபிஎல் மினி ஏலம் .. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கிய வீரர்கள்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த மினி ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். ஆனால் இதில் 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார். அதில் 30 இடங்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களுடையது. மீதி 57 இடங்களுக்கு மட்டுமே இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஏலம் முதல் சுற்று முடிவடைந்துள்ளது.

இந்த  ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச விலைக்கு இங்கிலாந்து வீரர் சாம் கரண் ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. அதேபோல், ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை 17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது

மேலும், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான பெண் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. மற்றோரு இங்கிலாந்து வீரரான ஹாரி ப்ரோக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.

தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கிய வீரர்கள்;

அஜிங்க்யா ரஹானே (ரூ. 50 லட்சம்) சிஎஸ்கே

பென் ஸ்டோக்ஸ் (ரூ. 16.25 கோடி) சிஎஸ்கே

ஷேக் ரஷீத் (ரூ. 20 லட்சம்) சிஎஸ்கே

நிஷாந்த் சிந்து (ரூ. 60 லட்சம்) சிஎஸ்கே

கைல் ஜேமிசன் (ரூ. 1 கோடி) சிஎஸ்கே


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL mini auction CSK bought players


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->