ஐபிஎல் மினி ஏலம்.. முக்கிய வீரர்களை விடுவித்த சென்னை, மும்பை அணிகள்.! - Seithipunal
Seithipunal


2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில், ரசிகர்களின் கவனம் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பி உள்ளது. மேலும் அதற்கான பணிகளை பிசிசிஐ-யும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி அன்று கொச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுடைய அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

அதற்கான பணிகளை அணி நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் முக்கிய அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தாங்கள் விடுவித்த வீரர்களின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் மும்பை அணியில் கைரன் பொல்லார்ட், பெபியன் ஆலன், டைமல் மில்ஸ், ஹிரித்திக் சௌகின், மயாங்க் மார்க்கண்டே ஆகிய வீரர்களை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவிந்திர ஜடேஜா, கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, மிட்செல் சான்ட்னர் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL mini auction CSK and MI released players


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->