மிட்செல் மார்ஷை தட்டித்தூக்கிய முக்கிய அணி.. மற்ற வீரர்களின் அணி விவரம்.! - Seithipunal
Seithipunal


15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்துள்ளது. 

10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 25 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். அதன்படி, பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. 

இந்நிலையில், பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது. இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரர்கள்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் ₹6.50 கோடிக்கு ஏடெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

 மேலும், இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவை, ₹8.25 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளது.

 மேலும், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட் உள்ளிட்ட வீரர்களை எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ipl Mega Auction Mitchell Marsh sold to Delhi capitals


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->