#BigBreaking : இந்தியாவுக்கு இன்று சிறப்பான நாள்., அடுத்தடுத்து பதக்கங்கள்.! தெறிக்கவிடும் நம்ம பசங்க.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. ஒரு பதக்கம் நிச்சயம் உறுதியாகியுள்ளது. 

பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரைத் தொடர்ந்து மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் இந்தியாவுக்கு லவ்லீனா ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில், இந்திய வீரர்களும் பதக்கங்களை வெல்வதற்கு இன்று அடுத்தடுத்து வெற்றி பெற்று முன்னேறியுள்ளனர். சொல்ல போனால் இன்று இந்தியாவுக்கு சிறப்பான நாள். 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் ஆடவர் போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். மல்யுத்தம் 86 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா, சீன வீரரை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார். 

இதேபோல், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் ஆடவர் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா, பல்கெரிய வீரரை 14-4 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார். 

முன்னதாக, இன்று ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்ட முதல் வாய்ப்பிலேயே, 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian players are semifinal in wrestling


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->