இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி.. இந்திய அணி அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


இந்திய அணி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கென்னிங்டன் ஓவல், லண்டன் வைத்து நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பித்த முதலே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.ஜேசன் ராய் ரன் ஏதும் எடுக்காமலும், ஜானி பேர்ஸ்டோவ் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட்(0) பும்ராவின் புயலில் டக் அவுட் ஆகினார். அடுத்ததாக முகமது ஷமியிடம் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். லியாம் லிவிங்ஸ்டோன் 8 பந்துகளை சந்தித்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கிளீன் போல்ட் ஆகினார்.அதன் பின் வந்தவர்கள் சொற்ப ரன்களிலே ஆட்டம் இழந்தனர் .இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 30 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து அணி 25 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 110 ரன்களை எடுத்தது .

இந்திய அணியில் பும்ரா 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை எடுத்தார். ஷமி 3 விக்கெட் மற்றும் பிரசித் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை திணறடித்தனர். ரோஹித் ஷர்மா (76), ஷிகர் தவான் (31) ரன்களை இறுதி வரை இருவரும் ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டனர். இந்திய அணி 18.4 ஓவர்கள் முடிவில் 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs England 1st oneday Match india won by 10 wickets


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->