பாகிஸ்தானுக்கு சாதனை இலக்கை நிர்ணயித்த இந்தியா! கவனக்குறைவால் பரிதாபமாக வெளியேறிய கோலி! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை போட்டியில், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இருக்கும் பரபரப்பை விட அதிக பரபரப்பை கொண்டதாக கருதப்படுவது இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியாகும்.  

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். 

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் முகமது ஆமிரின் பந்தை நேர்த்தியாக தடுத்து ஆடினார். மறுமுனையில் ஆரம்பம் முதலே ரோகித் சர்மா அடித்து ஆட தொடங்கினார். 

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்ட ரோஹித் சர்மா 34 பந்துகளிலும், நிதானமாக விளையாடிய லோகேஷ் ராகுல் 69 பந்துகளில் அரை சதமடித்தார்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 100  ரன்களை கடந்த நிலையில், 136  ரன்கள் எடுத்திருந்தபோது லோகேஷ் ராகுல் 57 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

85 பந்துகளில் சதமடித்த ரோஹித் ஷர்மா, தேவையற்ற ஷாட்டினால் 140 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் விராட் கோலி நிதானமாக விளையாடிய ஆட்டத்தினை அதிரடிக்கு மாற்றினார்.

51 பந்துகளில் அரை சதமடித்த அவர் 57 ரன்களை கடந்த போது ஒருநாள் அரங்கில் 11000 ரன்களை வேகமாக கடந்தவர் என்ற சாதனையை சச்சினிடமிருந்து தட்டி பறித்துள்ளார்.

அதன்பிறகு வந்த ஹர்டிக் பாண்டியா 26 ரன்களிலும், டோனி 1 ரன்களிலும் அடித்து ஆட முற்பட்டு ஆட்டமிழந்தார்கள். அதன் பின்னர் 46.4 ஓவர்களில் இந்திய 305 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் மழையால் தடைபட்டது. 

ஒரு மணி நேர தடைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 77 ரன்களை எடுத்திருந்த போது, பேட்டில் பந்து பட்டதாக நினைத்து வெளியேறினார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை, பவுலர் விக்கெட் கேட்கவில்லை, பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் அப்பீல் செய்யவில்லை, ஏதோ தயக்கத்திலே தானாகவே வெளியேறிவிட்டார். 

அதன்பின்னர் வந்த ஷங்கர், ஜாதவ் இருவராலும் பாகிஸ்தானின் துல்லிய பந்துவீச்சில் அதிரடியாக ரன்கள் அடிக்க முடியாமல் நிதானமாக ரன்களை சேர்த்தார்கள். மழைக்கு பின்னான 20 பந்துகளில் இந்திய அணி 31 ரன்களை மட்டுமே சேர்த்தது.

50 ஓவர் முடிவில் இந்தியா அணி 336 ரன்களை அடித்துள்ளது. உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அதிகபட்ச ரன் இதுவாகும். பாகிஸ்தான் அணி தரப்பில் அமீர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India register highest score against Pakistan in CWC19


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->